Sunday, 23 October 2011

லண்டனில் 100 , 000 ஸ்டேர்லிங் பவுண்கள் சம்பாதிக்கும் சிறுவன்!


சிறுவன் ஒருவன் சம்பாதிக்கும் தொகையைப் பார்த்தீர்களா? பிச்சை எடுக்கும் சிறுவன் ஒருவன் வருடாந்தம் 100 000 ஸ்டேர்லிங் பவுண்கள் சம்பாதிப்பதாக அதிர்ச்சித் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
பிச்சை எடுக்கும் சிறுவர்களை வெளிநாடுகளைச் சேர்ந்த கொலைகாரக் குழுக்கள் கோடி கோடியாக பணம் சம்பாதிக்கும் நோக்கில் ஈடுபடுத்தியுள்ளதாக தெரிய வந்துள்ளது.
ரோமானியாவைச் சேர்ந்த கிப்ஸி இனத்தவர்கள் தான் குறித்த சிறுவர்களைப் பிச்சை எடுக்க பயன்படுத்தி பகட்டு வாழ்க்கை வாழ்வதாக தெரிய வந்துள்ளது.
இவர்கள் அரண்மனைகள், ஆடம்பரக் கார்கள் என்று வசதியாக மன்னர்கள் போல் வாழ்ந்து வருகிறார்கள். பிச்சைக்காரர்கள் தங்கள் குழந்தைகளையும் பிச்சை எடுப்பதிலேயே ஈடுபடுத்தி வருகிறார்கள்.
இப்படியான செயல்கள் பிரிட்டனில் ஊக்குவிக்கப்படுவதாகவும் தெரிய வந்துள்ளது.
பி.பி.சி இன் செய்தியாளர் ஒருவர் கருத்துத் தெரிவிக்கையில்,
லண்டனில் குழந்தையுடன் பிச்சை எடுக்கும் அம்மாக்களின் தொகையும் அதிகரித்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
நான்கு வயதுடைய ஆலிஸ் என்ற பெண் குழந்தை ஒன்று கொண்டுவரப்பட்டு பெரிய அங்கி ஒன்றை அணிவித்து லண்டனின் முக்கிய தெருக்களில் விடப்பட்டதாகவும் குறித்த செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

No comments: